ஜனாதிபதி மாளிகையில் சொத்துகளை சேதப்படுத்திய ஐவர் கைது
சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொம்பனித்தெரு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நீதிமன்ற உத்தரவை மீறி ஆர்ப்பாட்டங்களை நடத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டில் ருஹுனு பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் அழைப்பாளர் அந்தோனி வெரங்க புஷ்பிகாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜூன் 09 மற்றும் 10 ஆம் திகதிகளில் முறையே கோட்டை மற்றும் பத்தரமுல்லையில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்ட அவர், மேலதிக விசாரணைகளுக்காக கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்கள் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜனாதிபதி மாளிகையில் சொத்துகளை சேதப்படுத்திய ஐவர் கைது
Reviewed by Author
on
July 29, 2022
Rating:

No comments:
Post a Comment