அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை மீன் பிடிப்பதற்கு அனுமதி சீட்டை பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் தனுஷ்கோடி - தலைமன்னார் இடையே நேற்று வியாழக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ஒரு விசைப்படகையும், 6 மீனவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தது. இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை (22) ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் உள்ள ஜான் மடிக்கட்டும் இடத்தில் ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது 

 இந்த ஆலோசனை கூட்டத்தில் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ஆறு மீனவர்களையும், விசைப்படகையும் மற்றும் கடந்த 2018 முதல் தற்போது வரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை வசமுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகையும் விடுதலை செய்ய வலியுறுத்தி வருகிற 24-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் பேருந்து நிலையத்தின் முன்பாக மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் இன்று வெள்ளிக்கிழமை (22) முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அவசர ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.



இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 6 மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி எதிர்வரும் 24 ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் Reviewed by Author on July 22, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.