மன்னாரில் குடிநீர் விநியோகம் முன் அறிவித்தல் இன்றி தடை-மக்கள் பாதிப்பு.
எனினும் இன்று (16) சனிக்கிழமை காலை முதல் குடிநீர் விநியோகம் எவ்வித முன் அறிவித்தலும் இன்றி தடைபட்டுள்ளது.இதனால் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக விசனம் தெரிவித்துள்ளனர்.
-இவ்விடயம் தொடர்பாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையுடன் தொடர்பு கொண்டு வினவிய போது,,,
-எரிபொருள் தட்டுப்பாடு காரணமாகவே குறித்த நீர் விநியோகத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
உரிய முறையில் எரிபொருள் வழங்கப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளோம்.
தற்போது எமக்கு தேவையான எரிபொருள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
-எனவே உடனடியாக மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையினால் வழங்கப்பட்டு வரும் மன்னார் பிரதேச பாவனையாளர்களுக்கான உள்ளக குடிநீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும்-என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் குடிநீர் விநியோகம் முன் அறிவித்தல் இன்றி தடை-மக்கள் பாதிப்பு.
Reviewed by Author
on
July 16, 2022
Rating:

No comments:
Post a Comment