மன்னாரில் சுமார் 40 நாட்களாக மண்ணெண்ணெய் இல்லாமல் பாதிக்கப்படும் மீனவர்கள்
1000 ரூபாய் கொடுத்து எரிபொருள் பெற்று மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டாலும் உரிய லாபம் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர் மீனவர்கள்.
இந்த நிலையில் அண்மைய நாட்களாக வாகனங்களுக்கு டீசல் மற்றும் பெட்ரோல் விநியோகம் இடம் பெறுகின்றது.
ஆனால் மண்ணெண்ணெய் விநியோகம் தொடர்பில் எரிபொருள் அமைச்சரோ கடற்றொழில் அமைச்சரோ ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே மீனவர்களுக்கு உரிய எரிபொருள் விநியோகம் சீராக இடம் பெறாத பட்சத்தில் கற்பிட்டி தொடக்கம் கொழும்பு வரை உள்ள மீனவர்கள் படகுகளை வாகனங்களில் ஏற்றி கொழும்பில் உள்ள அமைச்சின் அலுவலகத்தை முற்றுகையிட வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம் என்றும் ஏனைய மீனவர் வீதிகளில் இறங்கி போராட வேண்டி வரும் எனவும் மன்னார் மீனவ சமாச செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் சுமார் 40 நாட்களாக மண்ணெண்ணெய் இல்லாமல் பாதிக்கப்படும் மீனவர்கள்
Reviewed by Author
on
July 30, 2022
Rating:

No comments:
Post a Comment