இன்று முதல் QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள்
குறித்த சந்தேகநபர்கள் தொடர்பான படங்கள் மற்றும் காணொளி ஆதாரங்களை 0742 123 123 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அனுப்பி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். சந்தேகநபர்களின் QR குறியீடு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, விசாரணைகளின் பின்னர் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வலுசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் நேற்றைய தினம் வரை எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்தது. எவ்வாறாயினும் வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் மற்றும் கூப்பன் ஆகிய முறைமைகளில் எரிபொருள் விநியோகம் இன்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வாகன செஸி இலக்கத்தின் மூலம் QR முறைமைக்கு பதிவு செய்ய முடியாத வாகன உரிமையாளர்கள் வருமான அனுமதி பத்திரம் மூலம் பதிவு செய்ய சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்று முதல் நடைமுறையாகும் QR முறைமையூடாக வாகனங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள, ஒதுக்கீட்டு முறைமை மூலம் எரிபொருளை பெற்றுக்கொள்ள ஒரு வார காலம் காணப்படுவதுடன், அதனை நெருக்கடியின்றி பெற்றுக்கொள்ளுமாறு வலுச்சக்தி அமைச்சு பொதுமக்களிடம் கோரியுள்ளது.
QR முறைமை வெற்றியளித்தாலும், விநியோகத்திற்காக வழங்கப்படும் எரிபொருள் தொகையில் பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை தனியார் தாங்கி ஊர்தி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக எரிபொருள் நிரப்பு உரிமையாளர்கள் மற்றும் தாம் பாரிய நெருக்கடியை எதிநோக்குவதாக அந்த சங்கத்தின் செயலாளர் டி.வி. சாந்த சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இன்று முதல் QR முறைமையின் கீழ் மாத்திரமே எரிபொருள்
Reviewed by Author
on
August 01, 2022
Rating:

No comments:
Post a Comment