பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு
மீட்புப் பணிகளுக்கு உதவுவதற்காக துருக்கி தமது குழுவை பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளதாக அந்நாட்டின் வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
நிலவும் அசாதாரண வானிலையால் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக உள்துறை அமைச்சர் BBC-க்கு தெரிவித்துள்ளார்.
தமது அரசாங்கம் தம்மால் இயன்றளவான உதவிகளை மக்களுக்கு செய்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
பாகிஸ்தானில் இவ்வாறு வௌ்ளம் ஏற்படுகின்றமை மிக அரிது என்பதுடன், இம்முறை பெய்யும் பருவப்பெயர்ச்சி மழை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பெய்வதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர் பருவப்பெயர்ச்சி மழை காரணமாக சுமார் 33 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானில் வௌ்ளத்தில் சிக்கி 1033 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
August 29, 2022
Rating:

No comments:
Post a Comment