அண்மைய செய்திகள்

recent
-

மஹிந்த மற்றும் பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு !

நீதிமன்றத்தின் அனுமதியின்றி மகிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச வெளிநாடு செல்வதற்கு எதிரான இடைக்கால தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர்கள் இருவருக்கு விதிக்கப்பட்ட வெளிநாடு செல்வதற்கான பயணத்தடையை எதிர்வரும் 4ஆம் திகதி வரை நீடித்து உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டுள்ளது. 

 பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் கொண்ட அமர்வே இந்த உத்தரவை வழங்கியுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என தெரிவித்து இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தார்


மஹிந்த மற்றும் பசிலுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை நீடிப்பு ! Reviewed by Author on August 02, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.