மன்னாரில் ஸ்ரீலேகா பேரின்ப குமாரின் 'கோவர்த்தனம்' நாவல் வெளியீடு.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட நூலாசிரியர் ஸ்ரீலேகா பேரின்பகுமார் அவர்கள் நீண்ட காலம் மன்னார் நானாட்டான் மகா வித்தியாலயத்தில் ஆசிரியையாக பணிபுரிந்தவர்.
மன்னார் பெருநிலப் பரப்புப் பிரதேசங்களில் விவசாயத்திற்கு இணையாக கால்நடைகள் வளர்க்கப் படுவதுண்டு. அவ்வாறு வளர்க்கப்படும் கால்நடைகளை மேய்ச்சலுக்காக ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு சென்று பாதுகாப்பதில் உள்ள பிரச்சனைகள் , இதனால் பண்ணையாளர்கள் எதிர்நோக்கும் துன்பங்களை எடுத்துக் கூறும் வகையில் இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த நிகழ்வில் ஆசிரியர்கள் மாணவர்கள் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டார்கள்.
ஆசிரியை ஸ்ரீலேகா பேரின்ப குமார் அவர்களின் எட்டாவது இலக்கியப் படைப்பு 'கோவர்த்தனம்' நாவல் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் ஸ்ரீலேகா பேரின்ப குமாரின் 'கோவர்த்தனம்' நாவல் வெளியீடு.
Reviewed by Author
on
August 29, 2022
Rating:

No comments:
Post a Comment