கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்த சடலம்; இருவர் அதிரடி கைது!
மேற்படி மாமரத் தோட்டத்தில் வேலை செய்யும் மூவர் நேற்றிரவு குறித்த கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்துகொண்டு மது அருந்தியதாகவும், அதன் பின்னர் அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
மூவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் அம்மூவரில் ஒருவர் இவ்வாறு அடித்துப் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாகவும் பொலிஸார் கூறினர்.
அத்துடன், சடலமாக மீட்கப்பட்ட நபருடன் இணைந்து நேற்றிரவு மது அருந்தியதாக தெரிவிக்கப்படும் ஏனைய இருவரும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உயிரிழந்த நபரின் சடலம் நீதிவான் விசாரணையின் பின்னர் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் தடயவியல் பிரிவினருடன் இணைந்து மஹகும்புக்கடவல பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் குமார தலைமையில் குற்றப்பிரிவினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டெய்னர் பெட்டிக்குள் இருந்த சடலம்; இருவர் அதிரடி கைது!
Reviewed by Author
on
August 14, 2022
Rating:

No comments:
Post a Comment