அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் மேலும் புதிய இயந்திரங்களுடன் குருதி சுத்திகரிப்பு ஆரம்பம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் புதிதாக 4.6 ரூபாய் மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்ட இரு இறுதிநிலை சிறுநீரக நோயாளர்களின் குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் நிறுவப்பட்டு சேவைகளை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். 

 தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் 7 குருதி சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் குறித்த பிரிவில் சேவை வழங்கப்பட்டு வருகிறது. போதிய இயந்திரங்கள் இன்மையால் செட்டிகுளம், வவுனியா வைத்தியசாலையில் குருதி சுத்திகரிப்பு மேற்கொள்ளும் மன்னார் மாவட்ட நோயாளிகள் மேலும் புதிய இயந்திரங்களின் வருகையால் இனிமேல் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் தமது சிகிச்சைகளை பெற்றுக்கொள்ள முடியும்.என அவர் மேலும் தெரிவித்தார்






மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள குருதி சுத்திகரிப்பு பிரிவில் மேலும் புதிய இயந்திரங்களுடன் குருதி சுத்திகரிப்பு ஆரம்பம். Reviewed by Author on September 21, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.