கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மன்னாரில் 50 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.
சிறுவர்கள், ,மக்கள்,சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மேலும் பறக்கவிடப்பட்ட பட்டங்களில் எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை,பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை,உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்டு பறக்கவிடப்பட்டது.
குறித்த நிகழ்வில் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் யாட்சன் பிகிராடோ, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான இணையத்தின் இணைப்பாளர் எஸ்.திலீபன் குறித்த கிராம மட்ட அமைப்புகள் ,விவசாய, மீனவ சங்கங்கள்,பெண்கள் அமைப்புகள் சிவில் சமூக அமைப்புகள் மனித உரிமை ஆர்வலர்கள், வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
குறித்த போராட்டம் வடக்கு-கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில் 100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கௌரவமான அரசியல் தீர்வை வலியுறுத்தி மன்னாரில் 50 வது நாள் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு.
Reviewed by Author
on
September 19, 2022
Rating:

No comments:
Post a Comment