அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக தோட்டத்தில் முதலாவது அறுவடை...

மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் அவர்களின் வழிகாட்டலில் அலுவலகப் பிரிவுகளில் செய்யப்பட்டு வந்த வந்த மரக்கறி வகைகளின் முதலாவது அறுவடை நேற்று மேற்கொள்ளப்பட்டது. அதில் மிளகாய், கத்தரி, தக்காளி, பீட்ரூட், வெண்டைக்காய் போன்ற மரக்கறி வகைகள் எந்த ஒரு ரசாயன உரம் மற்றும் கிருமிநாசினிகள் இல்லாமல் நஞ்சற்ற வகையில் உற்பத்தி செய்யப்பட்டவையாகும்.

 இந்த நடவடிக்கை தற்போது நாட்டில் நிலவி வரும் பொருளாதாரம் மற்றும் உணவு நெருக்கடிகளை ஓரளவிற்கேனும் சமாளிப்பதற்காக பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையில் மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவு அலுவலர்களினால் மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது







மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அலுவலக தோட்டத்தில் முதலாவது அறுவடை... Reviewed by Author on September 06, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.