கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் 55 ஆம் நாள் போராட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு..
'வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்' எனும் 100 நாட்கள் செயல்முனைவு தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் நிலையில், 55 ம் நாள் போராட்டம் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு பிரதேசத்தில் இன்று(24)இடம்பெற்றது.
இப் போராட்டமானது அம்பாறை மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து எமக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும்.
எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, என கோஷங்களை எழுப்பியவாறு தங்களின் உரிமை கோரிக்கையையும் முன்வைத்தனர்.
கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல் 55 ஆம் நாள் போராட்டம் அம்பாறையில் முன்னெடுப்பு..
Reviewed by Author
on
September 24, 2022
Rating:

No comments:
Post a Comment