கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஏ9 வீதி இயக்கச்சி சந்தியில் 100 நாட்கள் செயல்முனைவின் மக்கள் குரல்.
இலங்கை நாட்டுக்குள் கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வையே கேட்கிறோம் ” “
வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் என்பது ஒரு ஜனநாயக உரிமையாகும் ” “ 13வது திருத்தச் சட்டமானது அரசியலமைப்பு ரீதியாக அதிகாரப் பரவலாக்க துக்கான உரிமையை உறுதிப்படுத்துகிறது.
” பெண்களுக்கு எதிரான வன்முறைகளை இல்லாதொழிப்போம்” எங்கள் நிலம் எமக்கு வேண்டும், நடமாடுவது எங்கள் உரிமை, பேச்சு சுதந்திரம் எங்கள் உரிமை, ஒன்று கூடுவது எங்கள் உரிமை, மத வழிபாடு எங்கள் சுதந்திரம், எமது மத தளங்களின் புனிதத்தை கொச்சைப்படுத்தாதே, இந்து மத ஆலயங்களின் இடங்களை திட்டமிட்டு அபகரிக்காதே என பல கோரிக்கைகளை முன் வைத்தார்.
எமது வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் வடக்கு கிழக்கு பிரதேசங்களிலுள்ள மக்களுக்கு நீதியுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டி முன்னெடுக்கப்படும் ஜனநாயகப் போராட்டங்களுக்கு பெரும் சவாலாக இலங்கை அரச படைப்பிரிவினரும், இலங்கை படைப்பிரிவுகளின் புலனாய்வினர்களும் செயற்படுவது ஜனநாயகத்தை குழி தோண்டி புதைக்கும் செயலாகவே நாம் கருதுவது டன், பாதிக்கப்பட்ட மற்றும் சிவில் செயற்பாட்டாளர்களின் உரிமைக்கான குரல் வளையை நசிக்கும் செயலாகவே நாம் இதனை கருதுவதுடன், இவ்வாறான செயல்களை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
அத்துடன் எமது “வடக்கு கிழக்கு மக்களுக்கு கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும்” எனும் ஜனநாயக ரீதியான மக்கள் குரலுக்கு மேன்மை தங்கிய இலங்கை ஜனாதிபதி அவர்கள் உதவ வேண்டும் எனவும் கோருகின்றோம்.
கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் ஏ9 வீதி இயக்கச்சி சந்தியில் 100 நாட்கள் செயல்முனைவின் மக்கள் குரல்.
Reviewed by Author
on
September 28, 2022
Rating:

No comments:
Post a Comment