அண்மைய செய்திகள்

recent
-

தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம் வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் இணக்கம்

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. அந்தவகையில், தோட்டத் தொழிலாளர்களுக்கு தீபாவளி முற்பணம் வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை எனவும் தீபாவளி முற்பணம் வழங்குவதற்கு தாம் அனுமதித்துள்ளதாகவும் பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளன ஊடகப்பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். 

உரிய நேரத்தில் அவர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் முற்பணம் கிடைக்கும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார். இதே நேரம், ஜனதா தோட்ட அபிவிருத்தி சபையின் கீழுள்ள பெருந்தோட்டங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு இம்முறை 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


தோட்டத் தொழிலாளர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய் தீபாவளி முற்பணம் வழங்க பெருந்தோட்ட நிறுவனங்களின் சம்மேளனம் இணக்கம் Reviewed by Author on October 09, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.