அண்மைய செய்திகள்

recent
-

புதிய நீர் இணைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் !

புதிய நீர் இணைப்புகளுக்காக அறவிடப்படும் கட்டணத்தை அதிகரிக்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தீர்மானித்துள்ளது. நிலவும் மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு மற்றும் அவற்றின் அதிகரிப்பு என்பவற்றை கருத்திற் கொண்டு இந்த கட்டண உயர்வு மேற்கொள்ளப்படவுள்ளதாக அந்த சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

 தற்போது, புதிய நீர் இணைப்பை பெற்றுக் கொடுப்பதற்காக 16 ஆயிரம் ரூபா முதல் 30 ஆயிரம் ரூபாவுக்கு இடைப்பட்ட கட்டணம் அறவிடப்படுகிறது. இந்தநிலையில், புதிய அதிகரிப்பு தொடர்பிலான சுற்றுநிரூபம் விரைவில் வெளியிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புதிய நீர் இணைப்புகளுக்கான கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் ! Reviewed by Author on October 18, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.