எமது காணிகளை மீட்பதற்கு உதவி புரியுங்கள்- 35 வருடங்களாக அகதிகள் முகாமில் வசிக்கும் யாழ்ப்பாணம் பொலிகண்டி மக்கள் கோரிக்கை .
இதன் போதே அந்த மக்கள் குறித்த கோரிக்கையை முன் வைத்தனர்.
-அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,,,,
யுத்தம் காரணமாக பலாலிப் பகுதியில் இருந்து இடம் பெயர்ந்து வந்த நாங்கள் இங்கு தனியார் காணிகளில் தங்க வைக்கப் பட்டுள்ளோம்.
காணி உரிமையாளர்கள் தங்களது காணிகளை விட்டு விலகுமாறு வற்புறுத்துகிறார்கள். எங்களது சொந்தக் காணிகளை இலங்கை இராணுவம் ஆக்கிரமித்து பலன் தரும் மரக்கன்றுகளை உருவாக்கி அனுபவித்து வருகின்றார்கள்.
ஆனால் நாங்கள் அனாதைகளாக ஓலைக் குடிசைகளில் மழை வெள்ளத்திற்குள் சுகாதார சீர்கேடுகள் உடன் வாழ்ந்து வருகிறோம்.
எனவே இலங்கை ஜனாதிபதி அவர்கள் தலையிட்டு இராணுவத்தினரிடம் இருந்து எமது காணிகளை மீட்டு எமது மீள் குடியேற்றத்துக்கு உதவி செய்ய வேண்டும் என பொலிகண்டி அகதிகள் முகாமில் வசிக்கும் மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
எமது காணிகளை மீட்பதற்கு உதவி புரியுங்கள்- 35 வருடங்களாக அகதிகள் முகாமில் வசிக்கும் யாழ்ப்பாணம் பொலிகண்டி மக்கள் கோரிக்கை .
Reviewed by Author
on
October 09, 2022
Rating:

No comments:
Post a Comment