அண்மைய செய்திகள்

recent
-

UPDATE: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 67 வயதுடைய பெண் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை – உத்துவான்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த பெண்ணொருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கேகாலை மொலகொட பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இதேவேளை, இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 40 பேர் காயம்!

கொழும்பு பிரதான வீதியின் மாவனெல்லை – உத்துவான்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 40 பேர் காயமடைந்துள்ளனர். தனியார் பேருந்து ஒன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. காயமடைந்தவர்கள் மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


UPDATE: இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 67 வயதுடைய பெண் உயிரிழப்பு Reviewed by Author on October 25, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.