நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6 பேர் பலி
\
மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
24 மணிநேரத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, நேற்று அதிகாலை 4.37 மணியளவிலும், இரவு 8.52 மணியளவிலும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது டெல்லி மற்றும் நொய்டா, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6 பேர் பலி
Reviewed by Author
on
November 09, 2022
Rating:

No comments:
Post a Comment