அண்மைய செய்திகள்

recent
-

மீண்டும் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்…

நாட்டில் குடிநீர் கட்டணத்தை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என்ற யோசனை சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நீர்பாசனத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுடனான கலந்துரையாடலின் போதே இவ்விடயம் கலந்துரையாடப்பட்டுள்ளது. 

அண்மையில் குடிநீருக்கான கட்டணம் திருத்தப்பட்டிருந்த போதும், நீர் சுத்திகரிப்பு உள்ளிட்ட செலவுகள் முன்பை விட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். இப்போதும் ஒரு லீற்றர் குடிநீருக்கு 5 சதமே கட்டணமாக அறவிடப்படுவதாகவும், ஆனால் அதன் விநியோக செலவுகள் 12 ரூபாவுக்கும் அதிகம் என்பதால் நீர் கட்டணத்தை மேலும் அதிகரிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


மீண்டும் நீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும்… Reviewed by Author on November 20, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.