வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வலுவடையக்கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
இந்த தாழமுக்கமானது நவம்பர் 20 ஆம் மற்றும் 21 ஆம் திகதிகளில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து இலங்கையின் வடக்குக் கரையை அண்மிக்கக் கூடிய சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலைநிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் வலுவடையக்கூடிய சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம்!
Reviewed by Author
on
November 19, 2022
Rating:

No comments:
Post a Comment