அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் கார்த்திகை மாத மர நடுகை

'மரம் நாட்டுவோம் எதிர்கால சந்ததியைப் பாதுகாப்போம்' எனும் தொனிப் பொருளில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதனின் எண்ணக்கருவில் வன்னி மண் அறக்கட்டளையின் நெறிப்படுத்தலில் இன்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் மர நடுகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

 குறித்த நிகழ்வு முருங்கன் அதிபர் தலைமையில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வில் நானாட்டான் பிரதேச சபை தவிசாளர், ஆசிரியர்கள், மாணவர்கள், மன்னார் மாவட்ட வனவளத் திணைக்கள அதிகாரிகள்,வன்னிமண் அறக்கட்டளை உறுப்பினர்கள்,பழைய மாணவர்கள், கலந்து கொண்டனர். இதன் போது பாடசாலை வளாகத்தில் 100 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.












மன்னார் முருங்கன் மத்திய கல்லூரியில் கார்த்திகை மாத மர நடுகை Reviewed by Author on November 04, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.