கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களுக்கு அழைப்பாணை!
பிணையில் விடுவிக்கப்பட்டு 5 நாட்களின் பின்னர் கஞ்சிப்பானை இம்ரான் தமிழ்நாடு – இராமேஸ்வரம் ஊடாக இந்தியாவிற்கு பிரவேசித்துள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளிலும் மாளிகாவத்தை பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாக வேண்டும் என கஞ்சிப்பானை இம்ரானுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
எனினும், அவர் அவ்வாறு முன்னிலையாகாத நிலையில் அது தொடர்பில் பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
இதற்கமைய, கஞ்சிப்பானை இம்ரானின் சகோதரரையும் மற்றைய பிணையாளரையும் எதிர்வரும் மார்ச் மாதம் வழங்கப்பட்டுள்ள வழக்குத் தவணையின் போது நீதிமன்றத்தில் முன்னிலையாக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சிப்பானை இம்ரானின் பிணையாளர்களுக்கு அழைப்பாணை!
Reviewed by Author
on
January 04, 2023
Rating:

No comments:
Post a Comment