மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு.
இதில் பிரதம விருந்தினராக மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ் பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் கே. மனோரஞ்சன் ,கௌரவ அதிதிகளாக அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் மன்னார் பிரதேச தலைவர் அஷ்ஷேக் எஸ்.ஏ .அஸீம், அகில இலங்கை ஜமியத்துல் உலமாவின் எருக்கலம்பிட்டி தலைவர் அஷ்ஷேக் கே.வி.எம். பாஸிர் ,மற்றும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முசலி பிராந்திய செயலாளர் அஷ்ஷேக் ரி.எம் . ஜாலிஸ் ,சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக்கல்வி அலுவலகத்தின் தமிழ் பாட ஆசிரிய ஆலோசகர் திருமதி அன்ரன் டபரேரா, முகைதீன் பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அஷ்ஷேக் ஏ.கே.எம். முதக்கீர் ,காட்டுபாவா சின்ன பள்ளி வாசல் இமாம் அஷ்ஷேக் எம்.வை.எம். திக்குறுல்லா ,ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், 7ஏ இற்கு மேல் சித்திகளை பெற்ற மாணவர்களுக்கும், பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களுக்கும் கௌரவம் அளிக்கப் பட்டதுடன் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விசேட விளக்கஉரையும், துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது.
மன்னார் எருக்கலம் பிட்டி மகளிர் கல்லூரியில் சிறப்பாக இடம்பெற்ற தேசிய மட்ட சாதனையாளர்கள் கௌரவிப்பு.
Reviewed by Author
on
January 20, 2023
Rating:

No comments:
Post a Comment