மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும்,3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தலைமையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளார்.
இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இன்று வெள்ளிக்கிழமை(20) காலை செலுத்தி உள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
-அதே வேளை ஈ.பி.டி.பி கட்சியானது மன்னார் மாவட்டத்தில் 2 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர்.
-மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை,மன்னார்,நானாட்டான்,முசலி,மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
மன்னார் நகரசபைக்கு 10 கட்சிகளும்,1 சுயேட்சைக் குழு உள்ளடங்களாக 11 பேரும், மன்னார் பிரதேச சபைக்கு 8 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 9 பேரும்,நானாட்டான் பிரதேச சபைக்கு 12
கட்சிகளும்,மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும், முசலி பிரதேச சபைக்கு 12 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 13 பேர் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கட்சிகளும்,மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும், முசலி பிரதேச சபைக்கு 12 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 13 பேர் கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளனர். -மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும்,3 சுயேட்சைக் குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தி உள்ளனர்.
Reviewed by Author
on
January 20, 2023
Rating:

No comments:
Post a Comment