சட்டவிரோத பயணம் ;நாடு கடத்தப்படட 46 இலங்கை பிரஜைகள்!
சட்டவிரோத பயணம்
தனிநபர்கள் குழுவில் பல நாள் மீன்பிடி கப்பலின் பணியாளர்கள், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு குழந்தை உட்பட 43 ஆண்கள் அங்கு சென்றுள்ளனர் .
2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் திகதி பிரான்சின் ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முற்பட்ட போது அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், மட்டக்களப்பு, சிலாபம் மற்றும் நீர்கொழும்பு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டுக்கு வந்தவர்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
சட்டவிரோத பயணம் ;நாடு கடத்தப்படட 46 இலங்கை பிரஜைகள்!
Reviewed by Author
on
January 14, 2023
Rating:

No comments:
Post a Comment