அண்மைய செய்திகள்

recent
-

மருத்துவமனைகளுக்கான முட்டை விநியோகம் முற்றாக நிறுத்தம்!

நாட்டின் மருத்துவமனை அமைப்பிற்கான முட்டை விநியோகம் தற்போது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. முட்டையின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதையடுத்து சப்ளையர்கள் வைத்தியசாலைகளுக்கு முட்டை வழங்குவதை நிறுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டதாக மன்றத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லானா தெரிவித்துள்ளார் . 

நாட்டின் சகல அரசு மருத்துவமனையிலும் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக, தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் தீக்காயப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள், நீரிழிவு நோயாளிகள், சிறப்பு உணவு வழங்கப்பட வேண்டிய நோயாளிகள், புரதச் சத்து குறைபாடு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் அவதியுறும் நோயாளிகள் போன்றவர்களுக்கும் கூட முட்டை கொடுக்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார். . கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 10,000 முட்டைகளும் , லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு வாரத்திற்கு 12,000 முட்டைகளும் தேவைப்படுவதாக தெரிவித்துள்ள அவர் அரசு உடனடியாக முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் அல்லது மருத்துவமனைகளுக்கு முட்டை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்

.
மருத்துவமனைகளுக்கான முட்டை விநியோகம் முற்றாக நிறுத்தம்! Reviewed by Author on January 04, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.