பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை: கைதான மாணவருக்கு ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்
சந்தேகநபர் கடந்த பல வருடங்களாக ஒருவகை மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்பதால், அவருக்கு உளநல மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட வேண்டுமென சந்தேகநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உபுல் ரணசிங்க இன்று மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஆராய்ந்த நீதவான், சந்தேகநபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் உளநல மருத்துவ பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஒருவரிடம் அழைத்துச்சென்று அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீகவியல் ஆய்வுப் பிரிவில் 03 ஆம் ஆண்டில் கல்விகற்கும் 24 வயதான மாணவி கொலை செய்யப்பட்டதுடன், சம்பவம் தொடர்பில் அதே பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்து கொலை: கைதான மாணவருக்கு ஜனவரி 30 ஆம் திகதி வரை விளக்கமறியல்
Reviewed by Author
on
January 18, 2023
Rating:

No comments:
Post a Comment