அண்மைய செய்திகள்

recent
-

இரு பிள்ளைகளின் தந்தை தீப்பற்றி மரணம் !

இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் தீப்பற்றி இன்று (07) காலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இறந்தவர் களுத்துறை, கட்டுகுருந்த பகுதியில் வசிக்கும் 43 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், களுத்துறை போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 கணவன்-மனைவி இடையே சில காலமாக குடும்பத் தகராறு காணப்பட்டதாகவும், நேற்று குறித்த நபர் மனைவியுடன் தகராறு ஏற்பட்டதும் இதுவரை நடந்த விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேலும் உயிரிழந்தவர் சுமார் ஒரு மாத காலமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டுக்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து தனது மகளுடன் ரயில் முன்பாய் முற்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

.
இரு பிள்ளைகளின் தந்தை தீப்பற்றி மரணம் ! Reviewed by Author on February 07, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.