அண்மைய செய்திகள்

recent
-

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் பலி!

கட்டுநாயக்க மடவல பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பொலிஸ் காவலில் இருந்த 30 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவம் இன்று (23) காலை இடம்பெற்றுள்ளது. கொலை சம்பவங்கள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கட்டுநாயக்க பொலிஸார் குறித்த நபரை மாத்தறையில் வைத்து நேற்று (22) கைது செய்துள்ளனர். 

 பின்னர், அவர் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை கண்டுபிடிக்க இன்று காலை 6 மணியளவில் கட்டுநாயக்க மடவளை பகுதியில் உள்ள மாதுவ சதுப்பு நிலத்திற்கு சந்தேக நபரை அழைத்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு மற்றும் கைத்துப்பாக்கியை மீட்கும் போது, ​​சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டை வீச முற்பட்ட நிலையில் பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் சந்தேகநபர் ஒருவர் பலி! Reviewed by Author on February 23, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.