அண்மைய செய்திகள்

recent
-

திருமண வைபவத்தில் கைகலப்பு -ஒருவர் பலி;ஐவர் வைத்தியசாலையில் அனுமதி

அங்குருவாதொட்ட பட்டகொட சந்தியில் திருமண வைபவம் ஒன்றில் நேற்று (17) இரவு இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த நபரின் சடலம் இன்று அதிகாலை படகொடை வயல் வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பட்டகொட யதவர பிரதேசத்தைச் சேர்ந்த மங்கள பிரேமவர்தன என்ற 36 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

 சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டகொட பிரதேசத்தில் திருமண வைபவம் ஒன்றின் போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி படகொட சந்தியில் மோதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. அங்குருவாதொட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்



திருமண வைபவத்தில் கைகலப்பு -ஒருவர் பலி;ஐவர் வைத்தியசாலையில் அனுமதி Reviewed by Author on March 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.