அமெரிக்காவில் கடத்தல் படகுகள் கவிழ்ந்து 8 பேர் பலி
அப்போது கடும் பனிமூட்டம் இருந்ததால் அந்தப் படகுகள் கடலின் ஆழம் குறைந்த பகுதிக்குச் சென்றுவிட்டன. திடீரென அந்த 2 படகுகளும் கவிழ்ந்ததால் அதில் பயணம் செய்த 15 பேரும் நீரில் மூழ்கினார்கள்.
இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். இது பற்றி அறிந்ததும் கடலோர மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர். படகு கவிழ்ந்த பகுதியில் கடும்பனி நிலவியதால் மீட்புப் பணியில் தாமதம் ஏற்பட்டது. நீண்ட நேரத்துக்குப் பிறகு இறந்த 8 பேரின் உடல்களை அவர்கள் மீட்டனர். மற்றவர்கள் என்ன ஆனார்கள் எனத் தெரியவில்லை. அந்தப் பகுதியில் கடலின் ஆழம் குறைவாக இருந்ததால் அவர்கள் நீந்தி உயிர் தப்பி இருக்கலாம் எனத் தெரிகிறது. இதில் சில பெண்கள் இருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அந்தக் கப்பல்களில் இருந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது இதுவரை கண்டறியப்படவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கடத்தல் படகுகள் கவிழ்ந்து 8 பேர் பலி
Reviewed by Author
on
March 14, 2023
Rating:

No comments:
Post a Comment