அண்மைய செய்திகள்

recent
-

கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர்

 முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிழவன்குளத்தில் வசிக்கும் நவரத்தினம் நவரூபன் என்பவரது வீட்டிற்கு கடந்த 14/06/2023 வியாழக்கிழமை பிற்பகல் 4.30 மணியளவில் 4 விசேட அதிரடிப் படையினரின் துணையுடன் சென்ற வனசீவராசிகள் திணைக்களத்தினர் ஏழுபேர்  நவரூபனை  கைதுசெய்து கொண்டு சென்று கட்டிவைத்து அடித்து சித்திரவதை செய்து கொடுமைப்படுத்தியுள்ளனர். 


அதன் பின்னர் பொய்க்குற்றச் சாட்டுக்களை சுமத்தி நீதிமன்றில் முற்படுத்தி 14 நாட்கள் விளக்க மறியலில் வைக்க முயன்றுள்ளனர்.
எனினும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். சித்திரவதை செய்யட்டு கடுங்காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நவரூபன்
தற்போது  அவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேற்று (17)மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி காண்டீபன் உள்ளிட்டவர்கள் சந்தித்து விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளனர்







கிளிநொச்சி வனஜீவராசிகள் திணைக்களத்தினரின் நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் Reviewed by Author on June 18, 2023 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.