காலி-தென்கடலில் விபத்து-மீனவர்களை காப்பாற்றிய கடற்படை!
தென்கடலில் ஏற்பட்ட விபத்தினால் தீக்காயங்களுடன் மீன்பிடி படகில் இருந்த மீனவர் ஒருவரை கரைக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
காலியில் இருந்து சுமார் 431 கடல் மைல் தொலைவில் இலங்கைக்கு தென்மேற்கே ஆழ்கடல் பகுதியில்
குறித்த விபத்து நேர்ந்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
குறித்த மீனவர் காலி, கராபிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி நீர்கொழும்பு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஐந்து மீனவர்களுடன் “சசிந்த புதா” என்ற நெடுநாள் மீன்பிடி படகு கடலுக்கு சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது
காலி-தென்கடலில் விபத்து-மீனவர்களை காப்பாற்றிய கடற்படை!
Reviewed by Author
on
July 12, 2023
Rating:

No comments:
Post a Comment