மாத்தறையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை
திஹாகொட பண்டத்தர வேல்ல பகுதியில் ஒரு தொகை ஆயுதத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.
மாத்தறை குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் இந்த ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இடத்தில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட T56 ரக துப்பாக்கி ஒன்றும் , மெகசீன் ஒன்றும், T56 ரக 10 தோட்டாக்கள் உள்ளிட்ட மேலும் சில தோட்டாக்களும் மீட்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன், மாத்தறை குற்றப்பிரிவு மற்றும் மாத்தறை பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மாத்தறையில் ஆயுதக் களஞ்சியம் முற்றுகை
Reviewed by Author
on
July 26, 2023
Rating:

No comments:
Post a Comment