முதலமைச்சராக பதவியேற்றால் மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் – சீமான்
முதலமைச்சராக பதவியேற்றால் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டம் ரகுநாதபுரத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய திமுக அரசின் செயற்பாடுகள் குறித்து விமர்ச்சித்துடன் மீனவர்கள் விவகாரத்தில் மத்திய அரசு பாராமுகமாக இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.
இலங்கை கடற்படையினரால்; இதுவரை 800யிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சராக பதவியேற்றால் மீனவர்களின் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவேன் – சீமான்
Reviewed by Author
on
July 12, 2023
Rating:

No comments:
Post a Comment