இலங்கை விடயத்தில் அடக்கி வாசிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை
ஐ நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கை இந்த கலந்துரையாடல் வழிமுறை தொடர்பில் தனது கவலையை வெளிப்படுத்தியிருந்தாலும், அது அப்படியான கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட வேண்டும் என காத்திரமான பரிந்துரை ஏதும் அதில் இல்லை. சர்வதேச சமூகம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் சிறந்த நலன் தொடர்பில் உத்தேச, உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மதிப்பீடு செய்ய வேண்டும் எனவும் உதட்டளவில் வலியுறுத்தியுள்ளது.
அது மாத்திரமின்றி, உண்மையை கண்டறியும் வழிமுறையானது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களால் நம்பும்படி இருக்க வேண்டுமென கூறும் அந்த அறிக்கை, அது நேர்மையான கலந்துரையாடல்களிடமிருந்து ஆரம்பிக்க வேண்டும் எனக் கூறுகிறது. மேலும் அதை நடைமுறைபடுத்த அரசியல் திடசங்கற்பம் வேண்டும் என அந்த அறிக்கை கூறுகிறது.
“பாதிக்கபப்ட்டவர்கள் பழிவாங்கப்படும் அச்சமின்றி, தமது செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சுதந்திமாக இருப்பது மாத்திரமின்றி, அவர்கள் அர்த்தமுள்ள வகையில் பங்கேற்பதை செயற்படுத்தும் சூழ்நிலையிலும் இது நடைபெற வேண்டும்.”
கொடூரமான பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் நடைமுறையில் இருப்பதால், பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் பழிவாங்கப்படுவார்கள் என அஞ்சுகிறார்கள் மற்றும் மக்கள் தங்கள் உரிமைகளைக் கோரியும் ஈர்க்கும் போராட்டங்களை நடத்தியதற்காகவும், அற்பமான குற்றச்சாட்டுகளின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
அதுமாத்திரமின்றி இன்னும் இராணுவம் மற்றும் பொலிஸ் பிடியிலிருக்கும் நிலங்களில் எந்தளவிற்கு விடுவிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பிலான விபரங்களில், கடந்த அறிக்கைக்கும் தற்போதைய அறிக்கைக்கும் இடையே முரண்பாடுகள் இருந்தாலும், அது குறித்து அரசிடம் அந்த அறிக்கை கேள்வி ஏதும் எழுப்பவில்லை.
ஐ நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் கடந்த புதன்கிழமை (6) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இலங்கையில் இன்னும் பொறுப்புக்கூறல் விடயத்தில் நம்பிக்கையின்மை உள்ளதாக கூறியுள்ளார்.
“இலங்கையில் பொறுப்புக்கூறல் விடயத்தில் தொடர்ந்து நம்பிக்கையின்மை நிலவுகிறது-அது போர்க் குற்ற அராஜகங்களாக இருக்கலாம், அண்மைய மனித உரிமை மீறல்கள், ஊழல், அல்லது அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றில் நம்பிக்கையின்மை நிலவுகிறது, நாடு முன்னேற வேண்டுமாயின் அந்த பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்”.
எனினும், ஐ நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில், அதன் ஆணையாளர் உண்மையை கண்டறியும் ஆணைக்குழு தொடர்பில் பரந்துபட்ட கலந்துரையாடல் செய்து நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தாலும், தனது அதிருப்தியை வெளிப்படுத்தவோ அல்லது அது நடைபெறவில்லை என்றால், தண்டனை நடவடிக்கைகள் எடுப்பது பற்றி எந்த உத்தேச கருத்தையும் முன்வைக்கவில்லை.
இலங்கை விடயத்தில் அடக்கி வாசிக்கும் ஐநா மனித உரிமைகள் பேரவை
Reviewed by Author
on
September 10, 2023
Rating:

No comments:
Post a Comment