அம்பலவன்பொக்கணை சாள்ஸ் மண்டப பகுதியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பொலிசார் இடையூறு
கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் நிகழ்வுகள் தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் நாளை(27) உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது
அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பல்வேறு மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் வழக்கமாக மாவீரர் நாள் நினைவேந்தல் இடம்பெறும் இடங்களில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்க்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருகின்றன
அந்த வகையில் நேற்று மாலை குறித்த பகுதிக்குச் சென்ற முல்லைத்தீவு பொலிசார் நீதிமன்றத்தினுடைய கட்டளைகளை வழங்கி அங்கு கட்டப்பட்டிருக்கின்ற சிவப்பு மஞ்சள் கொடிகளை அகற்றுமாறு தெரிவித்துள்ளனர் இதன்போது அதனை அகற்ற முடியாது என மக்கள் தெரிவித்துள்ளனர்
இவ்வாறான பின்னணியில் பொலிசார் திரும்பி சென்றுள்ளனர் எவ்வாறாயினும் வழமை போன்று குறித்த சாள்ஸ் மண்டப பகுதியிலே இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் அனைத்து உறவுகளையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்த வருகை தருமாறு ஏற்பாட்டுக் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்
அம்பலவன்பொக்கணை சாள்ஸ் மண்டப பகுதியிலும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பொலிசார் இடையூறு
Reviewed by Author
on
November 26, 2023
Rating:

No comments:
Post a Comment