மன்னார் மாவட்ட மீனவர்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உரிய தீர்வை வழங்க வேண்டும்.
மன்னார் மாவட்ட மீனவர்கள் மற்றும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி உரிய தீர்வை வழங்க வேண்டும்.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் உள்ளடங்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பிரச்சினைகள் குறித்து மகஜர் ஒன்றை கையளிக்க முயற்சித்த போதும் மகஜர் கையளிக்க முடியாத நிலை ஏற்பட்டதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் ஊடக பேச்சாளர் என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
மன்னாரில் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வடக்கிற்கான விஜயத்தின் போது மன்னார் மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாட எங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் கலந்து கொண்டிருந்தோம்.கடல் தொழில் சார்பாக கலந்துரையாட நீண்ட நேரம் ஒதுக்கி தரப்படும் என தெரிவிக்கப்பட்டது.எனினும் கலந்துரையாடல் தொடர்பான நிகழ்ச்சி நிரல் மாற்றப்பட்டிருந்தது.
இதனால் எமது கோரிக்கைகளை முன் வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
ஜனாதிபதியிடம் முன் வைக்க முனைந்த கோரிக்கைகளை ஊடகங்கள் ஊடாக வெளிக்கொண்டு வருகின்றோம்.
1. இந்திய இழுவைப் படகுகள் தொடர்பாக
ஆயிரக் கணக்கான இந்திய இழுவைப்படகுகள் எமது வாழ்வாதாரம் அடியோடு அற்றுப் போகும் படியாக எமது கரைக்கு மிக அருகாமையில் (சுமார் 500 மீட்டர் தொலைவில்) வந்து மீன்பிடி நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:
Post a Comment