அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது.

 மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில்  சட்டவிரோதமாக   கடலட்டை பிடித்த 12 பேர் கைது.



மன்னார்  ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில்  சட்டவிரோதமாக இரவு நேர  கடலட்டை தொழிலில் ஈடுபட்ட 12 பேர் கடற்படையினரால் இன்று புதன்கிழமை (17) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட  தேடுதல் நடவடிக்கையின் போது ஓலைத்தொடுவாய் கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி   கடலட்டை   பிடித்துக் கொண்டிருந்த நிலையில்    12 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதன் போது  4  படகுகள், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக  பிடிக்கப்பட்ட சுமார் 968 கடலட்டைகள், 34 சங்குகளும்  கைப்பற்றப்பட்டன.

 கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். கைப்பற்றப்பட்ட கடலட்டைகள் மற்றும் சங்குகள் ஏல விற்பனை ஊடாக விற்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட நபர்கள் மற்றும் பொருட்கள் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகளை மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள்  மேற்கொண்டு வருகின்றனர்.







மன்னார் ஓலைத்தொடுவாய் கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டை பிடித்த 12 பேர் கைது. Reviewed by வன்னி on January 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.