அண்மைய செய்திகள்

recent
-

வவுனியா மாநகரசபையின் கழிவகற்றல் இடத்தை பார்வையிட்ட றிசாட் எம்.பி

 வவுனியா மாநகரசபையின் கழிவகற்றல் இடத்தை பார்வையிட்ட றிசாட் எம்.பி




வவுனியா, புதிய சாளம்பைக்குள மக்களின் முறைப்பாட்டையடுத்து வவுனியா மாநகரசபையின் கழிவுகள் கொட்டப்படும் இடத்தினை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான றிசாட் பதியுதீன் இன்று (17.02) பார்வையிட்டார்.


வவுனியா மாநகரபை உள்ளிட்ட உள்ளுராட்சி மன்றங்களின் கழிவுகள் வவுனியா, பம்பைமடுப் பகுதியில் நீண்ட காலமாக கொட்டப்பட்டு வருகின்றது. இந்நிலையில் குறித்த கழிவுகளால் அதன் அருகில் உள்ள புதிய சாளம்பைக்குளத்தில் வாழும் மக்கள் தாம் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.


குறித்த கழிவுகள் காற்று மற்றும் நீர் ஊடாகவும், கால்நடைகள் மூலமாகவும் தமது குடிமனைக்குள் வருவதாகவும் இதனால் நோய் தாக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் புதிய சாளம்பைக்குளம் பகுதிக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர் றிசாட் பதியுதீனிடம் முறையிட்டடிருந்தனர்.


இதனையடுத்து, குறித்த பகுதி மக்களுடன் இணைந்து பாராளுமன்ற உறுப்பினர் கழிவுகள் கொட்டப்படும் இடத்தை பார்வையிட்டதுடன், இது தொடர்பில் விரைவில் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் தெரிவித்திருந்தார்.










வவுனியா மாநகரசபையின் கழிவகற்றல் இடத்தை பார்வையிட்ட றிசாட் எம்.பி Reviewed by வன்னி on February 17, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.