அண்மைய செய்திகள்

recent
-

முல்லைத்தீவில் தனியார் காணியிலிருந்து செல் மீட்பு

 கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.


இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,


முல்லைத்தீவு - கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றினை உரிமையாளரினால் இன்றையதினம் (21.03.2024) துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார். இதையடுத்து கொக்குளாய் பொலிசாருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் செல்லினை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணையினை கொக்குளாய் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



முல்லைத்தீவில் தனியார் காணியிலிருந்து செல் மீட்பு Reviewed by Author on March 21, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.