மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை
புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் மன்னார் மாவட்டம் சயீட் சிட்டி பொது மைதானத்தில் இன்று புதன்கிழமை(10) காலை 7 மணிக்கு இடம்பெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஒரே நேரத்தில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகையும் குத்பா பிரசங்கமும் இடம் பெற்றது.
மன்னார் சயீட் சிட்டி பிரதம இமாம் எச்.என்.எம்.எம்.எஹியாகான் நோன்புப் பெருநாள் தொழுகை நடத்தி பிரசங்கமும் நிகழ்த்தினார்.
இதனை தொடர்ந்து ஏற்கனவே நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றன.
மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று (10) நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொண்டனர் .
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
மேற்படி பகுதிகளில் இடம்பெற்ற பெருநாள் தொழுகைகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
இன்று (10) நாடளாவிய ரீதியில் இஸ்லாமியர்கள் தமது புனித பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பின் அனைவரும் தமது பெருநாள் வாழ்த்துக்களை தமது உறவுகளுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொண்டனர் .
இதனை தொடர்ந்து தமது பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்ளும் முகமாக உறவினர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்களின் வீடுகளுக்கு சென்று பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு உணவு பண்டங்களை பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற நோன்பு பெருநாள் தொழுகை
Reviewed by NEWMANNAR
on
April 10, 2024
Rating:

No comments:
Post a Comment