அண்மைய செய்திகள்

recent
-

யாழ்ப்பாணத்தில் போதை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை

 யாழ்ப்பாணம் இணுவிலில் முதல்முறையாக போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நிலையமொன்று முற்றுகையிடப்பட்டது.


பாடசாலை மாணவர்களை இலக்கு போதைப்பொருளை விற்பனை செய்யும் கும்பலை தேடிச்சென்றபோது வீடொன்றில் இயங்கிய போதைப்பொருள் உற்பத்தி நிலையம் யாழ்ப்பாண பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.


இது குறித்து மேலும் தெரியவருவதாவது,



ஐஸ் போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தில் இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை தொடர்ந்து போதைப்பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டது.


குறித்த நிலையம் இரசாயாண ஆய்வு கூடத்தை போன்று வடிவமைக்கப்பட்டு இரசாயனங்களை பயன்படுத்தி போதைப்பொருள் உற்பத்தி செய்யப்பட்டதாக சட்ட வைத்திய அதிகாரி நேரில் சென்று பார்வையிட்டு உறுதிப்படுத்தியுள்ளார்.


வாள்வெட்டு கும்பலொன்றில் இயங்கும் ஒருவருக்கு சொந்தமான வீட்டிலேயே குறித்த நிலையம் இயங்கியுள்ளதுடன் பொலிஸார் முற்றுகையிட்டபோது அங்கு எவரும் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.


இந்நிலையில் போதைப்பொருள் ஆய்வுகூடத்தில் பிரதான குற்றவாளிகளை தேடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் கொழும்பில் இருந்து இரசாயன பகுப்பாய்வு பிரிவினரை அழைத்து விசாரணை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.



யாழ்ப்பாணத்தில் போதை பொருள் உற்பத்தி நிலையம் முற்றுகை Reviewed by Author on May 14, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.