யாழ்ப்பாணம் நூலகத்தின் எரியும் நினைவுகள் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது
>யாழ்ப்பாண பொது நூலக கதையின் 'எரியும் நினைவுகள்' என்னும் கருப்பொருளில் ஆவணப்படம் திரையிடப்பட்டுள்ளது.
தமிழ் சிவில் சமூக அமையத்தின் ஏற்பாட்டில் ஆவணப்பட திரையிடலும், கலந்துரையாடலும் யாழ் பொதுநூலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றைய தினம் மாலை நடைபெற்றது.
குறித்த ஆவணப்படத் திரைப்படத்தினை இயக்குநர் ப.சோபிதர்மன் இயக்கியுள்ளார்.
இதில் 1981 ஆம் ஆண்டிலிருந்து 1986 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண பொது நூலகம் எரியூட்டப்பட்ட போது ஏற்பட்ட அழிப்பு மற்றும் ஊரடங்கு சட்டத்தின் போது அங்குள்ள கடைத்தொகுதிகள் அழிப்பும், கறுப்பு ஜூலை தொடர்பாகவும், பொதுமக்களின் இடப்பெயர்வுகளும் அழிவுகளும் தொடர்பான ஆவணப்படமாக்கல் தொடர்பான ஆக்கபூர்வமான கருத்துக்களும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி ம.ரகுராம், தவத்திரு வேலன் சுவாமிகள், முன்னாள் ஈழநாடு பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ம.இராதையன், இலக்கியவாதிகள், தமிழ் சிவில் சமூக இளைஞர், யுவதிப் பிரதிநிதிகள், சான்றோர்கள், கலைஞர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
Reviewed by Author
on
May 30, 2024
Rating:


No comments:
Post a Comment