இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றது. வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம்..
இந்திய மீனவர்களின் அத்து மீறிய நடவடிக்கை தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற நிலையில் கலந்துரையாடல்கள் இடம் பெற்று சில இனக்கப்பாட்டிற்கு வந்தாலும் இலங்கை இந்திய அரசின் அசமந்த போக்கு காரணமாக துன்பியல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயற்குழு கூட்டம் இன்றைய தினம் சனிக்கிழமை (29) காலை மன்னாரில் இடம் பெற்றது.
இதனை தொடர்ந்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த ஊடக சந்திப்பில் வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் கலந்து கொண்டிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
Reviewed by Author
on
June 29, 2024
Rating:


No comments:
Post a Comment