ஈழத்து திருச்செந்தூரில் குவிந்த மக்கள் சிறப்பாக இடம் பெற்ற கும்பாபிஷேகம்
இலங்கையின் ஈழத்து திருச்செந்தூர் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு கல்லடி ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்தின் திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு கும்பாபிஷேக பெருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.
கடந்த 16ஆம் திகதி கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகியது.
நேற்று புதன்கிழமை அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்து நிகழ்வும் நடைபெற்றது.
இன்றைய தினம் காலை விசேட யாக பூஜைகள் நடைபெற்றதுடன் கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு திருநெறிய தெய்வத்தமிழ் திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்)இடம்பெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
ஈழத்து திருச்செந்தூரில் குவிந்த மக்கள் சிறப்பாக இடம் பெற்ற கும்பாபிஷேகம்
Reviewed by Author
on
June 20, 2024
Rating:
.jpg)
No comments:
Post a Comment