யாழில் மீட்கப்பட்ட மர்ம பெட்டியால் பரபரப்பு
ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்ம பெட்டியொன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
நேற்று (16) காலை அனலைதீவு கடற்பரப்பில் மிதந்து வந்த மர்மப் பெட்டியை கண்ட அனலைதீவு மீனவர்கள் ஊர்காவற்றுறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்படி பெட்டியை மீட்டுள்ளனர்.
மேற்படி பெட்டியினுள் தொலைத் தொடர்பு கருவி இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
யாழில் மீட்கப்பட்ட மர்ம பெட்டியால் பரபரப்பு
Reviewed by Author
on
June 17, 2024
Rating:

No comments:
Post a Comment