அண்மைய செய்திகள்

recent
-

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமாருக்கு மூன்று மாத விடுமுறை வழங்கிய பாராளுமன்றம்

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை  வழங்கப்பட்டுள்ளது. 

பாராளுமன்றம் இன்று  செவ்வாய்க்கிழமை (02) காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபே வர்தன தலைமையில் கூடியது. பிரதான நடவடிக்கைகள் அனைத்தும் முடிந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியெல்லவினால்  கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கான விடுமுறை முன்மொழியப்பட்டது . 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு  ஜூலை 2 ஆம் திகதியிலிருந்து  3 மாத காலங்களுக்கு விடுமுறையளிக்குமாறு வேண்டுகின்றேன் என  லக்ஷ்மன் கிரியெல்லவினால்   விடுமுறை முன்மொழியப்பட்டது.இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி.யான செல்வராசா கஜேந்திரன் வழிமொழிந்தார். 

இதனையடுத்து  தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு பாராளுமன்றத்தினால் 3 மாதங்களுக்கு விடுமுறை  வழங்க சபை இணக்கம்  வெளியிட்டது.



பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமாருக்கு மூன்று மாத விடுமுறை வழங்கிய பாராளுமன்றம் Reviewed by Author on July 02, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.