அண்மைய செய்திகள்

recent
-

கடற்றொழிலாளர்களுக்கான அவசர எச்சரிக்கை

மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் நெடுநாள் படகுகளின் கடற்றொழிலாளர்களும், கடல்சார் சமூகமும் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு, மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை இன்று (01) காலை வடக்கு ஆந்திரா மற்றும் இந்தியாவின் தெற்கு ஒடிசா கடற்கரை வழியாக அந்நாட்டிற்குள் நுழைந்தது.

இது அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எனவே, குறித்த கடற்பரப்புகளில் கடற்றொழில் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடும் போது மிகவும் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.



கடற்றொழிலாளர்களுக்கான அவசர எச்சரிக்கை Reviewed by Author on September 01, 2024 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.